Thursday, February 19, 2009

நாம் காதலர்களாகவே!!





நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்..
கண்ணோடு கண் நோக்கி,
கண் ஜாடையாலே பேசி,
கையோடு கைகோர்த்து,
கடற்கரையோரமாய் அமர்ந்து,
சின்ன சின்ன சரசம் செய்து,
இரவெல்லாம் நினைத்து ஏங்கி,
இரவு முடிந்து தூங்கி,
எப்போதும் உன் நினைவாய்.....

நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!.........

கல்யாணம் செய்து கொண்டு,
கணவனும் மனைவியுமாகி,
காலையில் அவசரமாய் எழுந்து,
காபி கலந்து, டிபன் செய்து
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
உன்னையும் கிளப்பி அனுப்பி
நானும் ஆபீஸ் சென்று
இருட்டியதும் வந்து
இரவு வேலைகள் முடித்து
இடைஇடையே பிரச்சினைகள் பேசி
எப்போதும் வேலைகள்
எப்போதும் சுற்றியுள்ள உறவுகள்
எல்லாவற்றையும் சமாளித்து
எங்கே அந்த காதல் நினைவுகள்?
யோசிக்கும் முன் தூங்கி...........

ஆம்!
நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!!