Tuesday, March 31, 2009

நன்றி! தமிழ்த்தோழி!

ந்ன்றி தமிழ்தோழி 

பட்டாம்பூச்சி விருது இரண்டாம்சுற்று வேகமாக இருக்கிற்து. இந்த ச்மய்த்தில் நான் ஒன்றை க்ண்டிப்பாக சொல்லவேண்டும்  

நான் அதிகம் எழுதுவதில்லை.காரண்ம் ஆணீ கடப்பாரை எல்லாம் இரண்டாம்பட்சம்
முதல் காரண்ம் டைப்பிங் தெரியாததால் எழுத அதிக நேரம் பிடிக்கும்.சோம்பேறித்தன்ம்.பலபதிவுகளை படித்துவிட்டு க்மண்ட்டுகூட எழுதாத சோம்பேறித்தனம்.
 
இவ்வளவு வேகமான பதிவர்க்ள் மத்தியில் நானா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது  தாரணிபிரியாவின் பட்டாம்பூச்சிவிருதில் ம்கிழ்ந்து எடுத்து ஒட்டி பதிவும்போட்டேன்

அதிக்ம் எழுதாத எனக்கு அன்பின் தோழி தமிழ்தோழி இன்னொரு பட்டாம்பூச்சி விருது கொடுத்தவுடன் தலைகால் புரியவில்லை. தவிரவும் ப்திவுகள் அதிகம் இல்லாத எனது பிளாகில் இரண்டு பட்டாம்பூச்சியை ஒட்டிக்கொள்ள ம்னசாட்சி இடம் கொடுக்கவில்லை. அவருக்கு ந்ன்றி தெரிவித்துவிட்டு விட்டுவிட்டேன்

ஆனாலும் தோழி என்ன் நினைத்துக்கொள்வாரோ என மனதில் உறுத்திக்கொண்டே இருந்த்தால் இந்த பட்டாம்பூச்சிவிருதின் இரண்டாவ்து சுற்றில் அவரின் பட்டாம்பூச்சியை ஒட்டி பதிவும் போட்டுவிட்டேன்

Saturday, March 21, 2009

அன்புமணி,வேத்தியன் & ஆதவா பட்டாம்பூச்சி விருதுகள்!!


அன்புமணி,வேத்தியன் & ஆதவா
பட்டாம்பூச்சி விருதுகள்!!


பட்டாம்பூச்சி விருது வாங்கி ரொம்ப நாளாச்சு. ஏகப்பட்ட 

ஆணிகள்,கடப்பாறைகளால் என்னால் பதிவுகூட போட முடியவில்லை. 

பெண்கள் தினத்தை ஒட்டி ஒரு கவிதை போட்டதோட சரி.

சரி!

நமக்குக்கிடைத்த பட்டாம் பூச்சியை கூண்டில் அடைத்துவிட்டோம். அது இப்போ 

3ஆகி 3 பேரிடம் போக வேண்டும்..

யாருக்கு அனுப்பலாம்? குடுத்தா அதை உபயோகிப்பவர்களுக்குக் கொடுக்க 

வேண்டும். நம் நண்பர் ஒருவர் 3 பேருக்கு கொடுத்தார். அதில் இடண்டு பேர் 

பெரிய பதிவர்களாம்.   அதனால் அப்படி ஒன்னு கொடுத்ததையே அவங்க 

கண்டுக்கவில்லை ! அட உண்மை தானுங்க!  புருடா இல்லை!

நான் கொடுக்கவிரும்பும் மூவர்!

1.குடந்தை அன்புமணி  http://anbuvanam.blogspot.com

அருமையான மனிதர்,பண்பானவர். அவர் பதிவுகளைப்பாருங்கள்.

2.வேத்தியன்   http://jsprasu.blogspot.com

சமீபகாலமாக புயல் வேகப்பதிவுகள் போடுபவர். விஜய் மேல ரொம்ப ஈடுபாடு 

உள்ளவர்.


கவிதை எழுதவா! ஆதவா! என்று அழைக்கும் அளவு பின்னி எடுக்கிறார் 

கவிதைகளை!!

இந்த பட்டாம் பூச்சியை எடுத்து (நன்றின்னு என்பெயர் போட்டு!!!) உங்கள் 

தளத்தின் நெற்றியில் ஒட்டவும்..

மேலும் 3 பேருக்கு கொடுக்கவும்..

Saturday, March 7, 2009

பெண்ணென்றால்.....


பெண்ணென்றால் கண் என்பர்,

பெண்ணேன்றால் பொன் என்பர்,

பெண்ணென்றால் பூவென்பர்

பெண்களே தெய்வம் என்பார்

பார்!.....என்றும் ஏட்டிலும் பாட்டிலுமே!


நிஜத்தில்....

தெருவில் நின்றிருப்பார்

சொற்களால் இழிவு செய்வார்

கருவினில் கண்டபோதும்

கலைத்திடு அதனை என்பார்!

பின்வருவதறியும் பெண்ணை

பின்புத்திக்காரி என்பார்

நன்மை ஆக்கி தீமை அழிக்கும் பெண்ணை

அழிவதும் பெண்ணாலே என்பார்!!



தெய்வமும் ஆக்க வேண்டாம்

தெருநாயாய் நடத்த வேண்டாம்

வேண்டுவதெல்லாம் இதுவே.....

நிஜமான பெண் விடுதலை வேண்டும்!

வேண்டும் என்றால்

வழங்க வேண்டாம்!!

வழங்க உரிமையற்ற

பெண்ணடிமைப் பிதாக்களே!


வழி விடுங்கள் போதும்

பெண் விடுதலை 

விரைவில் வரும்!!!!