அன்புமணி,வேத்தியன் & ஆதவா
பட்டாம்பூச்சி விருதுகள்!!
பட்டாம்பூச்சி விருது வாங்கி ரொம்ப நாளாச்சு. ஏகப்பட்ட
ஆணிகள்,கடப்பாறைகளால் என்னால் பதிவுகூட போட முடியவில்லை.
பெண்கள் தினத்தை ஒட்டி ஒரு கவிதை போட்டதோட சரி.
சரி!
நமக்குக்கிடைத்த பட்டாம் பூச்சியை கூண்டில் அடைத்துவிட்டோம். அது இப்போ
3ஆகி 3 பேரிடம் போக வேண்டும்..
யாருக்கு அனுப்பலாம்? குடுத்தா அதை உபயோகிப்பவர்களுக்குக் கொடுக்க
வேண்டும். நம் நண்பர் ஒருவர் 3 பேருக்கு கொடுத்தார். அதில் இடண்டு பேர்
பெரிய பதிவர்களாம். அதனால் அப்படி ஒன்னு கொடுத்ததையே அவங்க
கண்டுக்கவில்லை ! அட உண்மை தானுங்க! புருடா இல்லை!
நான் கொடுக்கவிரும்பும் மூவர்!
1.குடந்தை அன்புமணி http://anbuvanam.blogspot.com
அருமையான மனிதர்,பண்பானவர். அவர் பதிவுகளைப்பாருங்கள்.
2.வேத்தியன் http://jsprasu.blogspot.com
சமீபகாலமாக புயல் வேகப்பதிவுகள் போடுபவர். விஜய் மேல ரொம்ப ஈடுபாடு
உள்ளவர்.
கவிதை எழுதவா! ஆதவா! என்று அழைக்கும் அளவு பின்னி எடுக்கிறார்
கவிதைகளை!!
இந்த பட்டாம் பூச்சியை எடுத்து (நன்றின்னு என்பெயர் போட்டு!!!) உங்கள்
தளத்தின் நெற்றியில் ஒட்டவும்..
மேலும் 3 பேருக்கு கொடுக்கவும்..
